அரூர், மார்ச் 9: அரூர் பேரூராட்சி கோல்டன் தெரு, சந்தைமேடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய இடங்களில், புதிய வளர்ச்சி திட்டப்பணிகளுக்கான பூமி பூஜை நடந்தது. இதில் அரூர் கோல்டன் சிட்டியில், 15வது மானிய நிதி குழு மூலம் ₹25 லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, சந்தைமேட்டில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ₹10லட்சம் மதிப்பில் சுற்றுச்சுவர், அரூர் பேரூராட்சி 14வது வார்டில், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ₹7.30 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் கால்வாய் ஆகிய பணிகள் என மொத்தம் ₹42.30 லட்சம் மதிப்பிலான பணிகளாகும். இப்பணிகளை திமுக பேரூராட்சி தலைவர் இந்திராணி தனபால், துணை தலைவர் சூர்யாதனபால் ஆகியோர் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில், நகர செயலாளர் முல்லைரவி, செல்வதயாளன், மோகன், அருள்மொழி, ஜீவாஅன்பழகன், முஜீப் திருவேங்கடம், மாதேஸ்வரன், குபேந்திரன், அருள்முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
₹42.30 லட்சத்தில் பணிகள் தொடக்கம்
previous post