உத்தமபாளையம், ஆக. 7: ராயப்பன்பட்டி அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த டெட்டனேட்டர்களை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராயப்பன்பட்டி பகுதிகளில் தடை செய்யப்பட்ட வெடிபொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. குறிப்பாக இப்பகுதிளில் உள்ள கல்குவாரிகளில் பாறைகளை உடைக்க பயன்படுத்தப்படும் வெடிபொருட்களை முறைகேடாக பெற்று, சண்முகா நதி அணையில் மீன்களை பிடிப்பதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்தது.
இதனடிப்படையில் எஸ்ஐ முனியம்மாள் தலைமையில் அணைப்பட்டியில் உள்ள ஒரு வீட்டில் போலீசார் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர் இதில் டெட்டனேட்டர்கள் மற்றும் திரிகளை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் சோதனையிடும்போ, டெட்டனேட்டர்களை பதுக்கியவர் அங்கிருந்து தப்பியோடி விட்டார். இது தொடர்பாக வழக்குப்பதிந்த போலீசார், தப்பியோடியவரை தேடி வருகின்றனர்.