Friday, September 20, 2024
Home » விஷம் குடித்து அரசு பேருந்து ஓட்டுனர் சாவு

விஷம் குடித்து அரசு பேருந்து ஓட்டுனர் சாவு

by Karthik Yash

விருத்தாசலம், செப். 19: விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள மருங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் மாயவேல் மகன் பைரவன் (31). இவர் விருத்தாசலம் அரசு போக்குவரத்து பணிமனை 2ல் தற்காலிக ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். திருமணம் ஆகாமல் இருந்த நிலையில் திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகளை அவரது பெற்றோர் செய்து வந்துள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று மருங்கூர் பேருந்து நிறுத்தம் அருகே விவசாய நிலத்திற்கு பயன்படுத்தும் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துவிட்டு தனது நண்பர்கள் சிலருக்கு தகவல் தெரிவித்து விட்டு மயங்கி கிடந்துள்ளார். அதை கேட்டு அதிர்ச்சியடைந்த நண்பர்கள் சம்பவ இடத்திற்கு சென்று உறவினர்கள் உதவியுடன் உடனடியாக பைரவனை மீட்டு, சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றபோது அவரது உடல்நிலை மிகவும் மோசமாகி வந்ததால், செல்லும் வழியில் இருந்த குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்துள்ளனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து பைரவனின் தந்தை மாயவேல் கருவேப்பிலங்குறிச்சி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பைரவன் இறப்பு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

8 − 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi