விலைவாசி உயர்வு, வேலையின்மை அதிகரிப்பு, ஜிஎஸ்டி வரி உயர்வு, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகளை எழுப்பி ஒன்றிய அரசுக்கு எதிராக நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி மாபெரும் போராட்டம் நடத்தியது. பல இடங்களில் தடுப்புகளை மீறி காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையிலான காங்கிரஸ் எம்.பி.க்கள் பேரணியாக சென்றனர். தடுப்புகளை மீறியதாக ராகுல்காந்தியும், தர்ணாவில் ஈடுபட்டதாக சோனியா காந்தியும் கைது செய்யப்பட்டனர்.