திருவள்ளூர்: தமிழக ஹிந்து மக்கள் முன்னணி சார்பில் இந்து தமிழர் கட்சி நிறுவன தலைவர் ராம ரவிக்குமார், வி.எஸ்.கே.தமிழ்ச்செல்வம், மத்திய அரசு வழக்கறிஞர் ஜெய்ஹிந்த் சுகதேவ், ஆகியோர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதன் விவரம் வருமாறு: ஆந்திரா, ஒரிசா போன்ற பிற மாநிலங்களில் இருந்து திருவள்ளூர் மாவட்டம் வழியாக கேரளாவுக்கு இறைச்சிக்காக கால்நடைகள் கொண்டு செல்லப்படுகிறது. அவ்வாறு கொண்டு செல்லப்படும் மாடுகளுக்கு உச்ச நீதிமன்றம் உரிய சட்ட வழிகாட்டுதல்களை வரையறை செய்துள்ளதாகவும் ஆனால் மாடுகளை கேரளாவுக்கு கொண்டு செல்லும் வாகனங்களில் 40க்கும் மேல் ஏற்றி செல்கின்றனர்.வேகம் மருத்துவர்களிடம் உரிய சான்றிதழ் மற்றும் அதற்கான தீவனம் நீர் குறைந்தபட்ச இடைவெளி ஆகியவற்றுடன் 6 மாடுகளுக்கு மேல் ஏற்றிச் செல்லக்கூடாது என வரையறை செய்துள்ளது. ஆகவே உச்ச நீதிமன்ற வரையறை செய்துள்ள விதிகளை மதிக்காமல் மாடுகளை ஏற்றிச் செல்லும் வாகன உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர். அப்போது நெல்லை மணி, ஜமீன் மணிவேல், இயேசு, ராஜா, சந்திரகுமார், சிரஞ்சீவி ஆகியோர் உடன் இருந்தனர்….