நல்லம்பள்ளி, ஜூன் 23:தர்மபுரி மாவட்ட எஸ்பி., ஸ்டீபன் ஜேசுபாதம் உத்தரவின் பேரில், மாவட்டம் முழுவதுமாக போலீசார் கள்ளச் சாராய வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம், அதியமான்கோட்டை போலீசார் காவல் நிலைய பகுதிகளில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது, முக்கல்நாயக்கம்பட்டியை சேர்ந்த வேலு (55) என்பவர், சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வருவது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீசார் தேடிச்சென்ற போது, அவர் கிராமத்தின் அருகே உள்ள வனப்பகுதியில் பதுங்கி இருந்தது தெரிந்தது. இதையடுத்து, அவரை சுற்றிவளைத்து கைது செய்த ேபாலீசார், அவர் விற்பனைக்காக வைத்திருந்த 6 லிட்டர் சாராயம் மற்றும் 20 லிட்டர் ஊறலை பறிமுதல் செய்து அழித்தனர்.
வனப்பகுதியில் பதுக்கி சாராயம் விற்றவர் கைது
previous post