பூந்தமல்லி: திருவேற்காட்டை சேர்ந்தவர் அந்தோணி கவின்(29), டைல்ஸ் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு தாம்பரம் நோக்கி மோட்டார் சைக்கிளில் தாம்பரம் – மதுரவாயல் பைபாசில் சென்று கொண்டிருந்தார். வானகரம் அருகே சென்று கொண்டிருந்தபோது சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் அந்தோணி கவின் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்தோணி கவினின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து லாரி டிரைவர் செல்வராஜ்(30), என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்….