மும்பை: பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர், நடிகை அலியா பட் திருமணம் மும்பையில் நேற்று நடைபெற்றது. மறைந்த நடிகர் ராஜ்கபூரின் பேரனும் நடிகர் ரிஷிகபூரின் மகனுமான ரன்பீர் கபூர் இந்தியில் முன்னணி நடிகராக உள்ளார். இவர் இயக்குனர் மகேஷ் பட்டின் மகளும் நடிகையுமான அலியா பட்டை காதலித்து வந்தார். இவர்கள் சில வருடம் கழித்து திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டிருந்தனர். ஆனால் அலியா பட்டின் பாட்டிக்கு உடல் நலம் சரியில்லாத காரணத்தால், அவரது விருப்பத்தின் பேரில் உடனடியாக திருமணம் செய்து வைக்க இரு வீட்டாரும் முடிவு செய்தனர். அதன்படி மும்பையில் நேற்று முன்தினம் மெஹந்தி நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து ரன்பீர், அலியாவுக்கு நேற்று மாலை திருமணம் நடைபெற்றது. திருமண விழாவில் நடிகர்கள் சஞ்சய் தத், ஷாருக்கான், ஹிரித்திக் ரோஷன், வருண் தவன், நடிகைகள் கரீனா கபூர், கரிஷ்மா கபூர், கேத்ரினா கைப், இயக்குனர்கள் சஞ்சய் லீலா பன்சாலி, கரண் ஜோஹர் உள்பட திரையுலகினர் கலந்துகொண்டனர்….
ரன்பீர் கபூர் – அலியா பட் திருமணம்: மும்பையில் நடந்தது
previous post