பாப்பாரப்பட்டி: தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே பனைகுளத்தைச் சேர்ந்த 24 வயது இளம்பெண், கடந்த 16ம் தேதி தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், அதிகளவில் ரத்த போக்கு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து மருத்துவதுறை அதிகாரிகள் விசாரித்ததில், அந்த பெண்ணுக்கு கடந்த 6 மாதத்திற்கு முன்பு, தர்மபுரி அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்த நிலையில், மீண்டும் கர்ப்பமானார். அதை கலைக்க, பாப்பாரப்பட்டியில் உள்ள மெடிக்கலில் கடந்த 15ம் தேதி கருத்தடை மாத்திரை வாங்கி சாப்பிட்டுள்ளார். இதில் அதிகளவு ரத்தப்போக்கு ஏற்பட்டு உயிரிழந்தது தெரியவந்தது. தகவலறிந்து தர்மபுரி மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குநர் சாந்தி தலைமையில் அதிகாரிகள், போலீசார் அந்த மெடிக்கலில் சோதனை நடத்தினர். அப்போது, அனுமதி பெறாமல், மருந்து கடை கீழ்தளத்தில் கிளினிக் நடத்தியதும், கருத்தடை மாத்திரைகளை விற்றதும் தெரிந்தது. இதையடுத்து கடைக்கு சீல் வைத்தனர். கடை உரிமையாளர் செல்வராஜை (43) போலீசார் கைது செய்தனர்….