கோவில்பட்டி, மார்ச் 5:முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கோவில்பட்டி யூனியன், ஆவல்நத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட சுந்தரலிங்கபுரத்தில் 10ம் ஆண்டாக கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. யங் ஸ்டார்ஸ் கிரிக்கெட் கிளப் சார்பில் 4 நாட்கள் நடத்தப்பட்ட இப்போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா பின்னர் நடந்தது. இதில் பங்கேற்ற மேற்கு ஒன்றியச் செயலாளர் ராதாகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர் ரமேஷ், இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் பாரதி ரவிக்குமார் ஆகியோர் முதல் பரிசு வழங்கினர். சிவனணைந்தபுரம் சண்முகநாதன் 2ம் பரிசையும், கிளைச் செயலாளர்கள் ஆவல்நத்தம் அய்யாச்சாமி, சுந்தரலிங்கபுரம் தங்கமாரியப்பன் 3ம் பரிசையும், யூனியன் சேர்மன் கஸ்தூரி சுப்புராஜ் 4ம் பரிசையும் வழங்கினர்.