குளித்தலை, ஆக. 8: தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 6ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவர் நின்று வென்ற முதல் தொகுதியான குளித்தலையில் நகர திமுக சார்பில் அவரது உருவப்படத்திற்கு தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் பல்லவி ராஜா தலைமை வகித்து கருணாநிதி உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். நகர்மன்ற தலைவர் சகுந்தலா பல்லவி ராஜா, நகர அவைத் தலைவர் சாகுல் ஹமீது ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பொதுக்குழு உறுப்பினர் ஜாபருல்லா, நகர துணைச் செயலாளர் செந்தில்குமார் பொருளாளர் தமிழரசன் மற்றும் அனைத்து அணி நிர்வாகிகள், நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.