நெமிலி: ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அடுத்த நெல்வாய் கிராமத்தை சேர்ந்தவர் விக்னேஷ் (19). ஓச்சேரி அருகே உள்ள தனியார் கல்லூரியில் டிப்ளமோ படித்து வந்தார். நண்பர்கள் 4 பேருடன் அசநெல்லிகுப்பத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த மாரியம்மன் கோயில் திருவிழாவுக்கு சென்றுவிட்டு இரவு 11 மணி அளவில் வீட்டிற்கு திருமால்பூர் செல்லும் சாலை வழியாக சென்றுள்ளனர். அப்போது, விக்னேஷ் இயற்கை உபாதை கழிக்க அங்குள்ள வரதன் (70) என்பவரது நெல்வயல் பக்கமாக சென்றுள்ளார். அங்கு காட்டுப்பன்றிகளிடம் இருந்து பயிரை காப்பாற்ற வைத்திருந்த மின்வேலியை மிதித்த விக்னேஷ் மின்சாரம் பாய்ந்து பலியானார். இதுகுறித்து நெமிலி போலீசார் வழக்குப்பதிந்து அனுமதியின்றி மின்வேலி அமைத்த விவசாயி வரதனை கைது செய்தனர்….