திருச்சி,ஏப்.11: பாராளுமன்ற தோ்தலை முன்னிட்டு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் பெயா் மற்றும் சின்னங்கள் உள்ளீடு செய்யும் பணிகளை தோ்தல் நடத்தும் அலுவலா் மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் ஆய்வு மேற்கொண்டார்.
பாராளுமன்ற தோ்தலை முன்னிட்டு திருச்சி பாராளுமன்றத் தோ்தலுக்கான தொகுதியில் போட்டியிடும் வேட்பாளா்கள் இறுதி செய்யப்பட்டுள்ளதை தொடா்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தயார் செய்யும் பொருட்டு பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிட் பொறியாளா்கள் திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.
இந்நோ்வில், திருச்சி பாராளுமன்றத் தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்களுக்கு தகவல் தொிவிக்கப்பட்டு, திருச்சி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ரங்கம், திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், கந்தா்வக்கோட்டை(தனி), புதுக்கோட்டை ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகளின் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்களின் முன்னிலையில், திருச்சி பாராளுமன்ற தொகுதியில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் பெயா் மற்றும் சின்னங்கள் உள்ளீடு செய்யும் பணி நேற்று காலை முதல் நடைபெற்று வருகிறது.