சேலம் மேற்கு தொகுதியில் பாமக சார்பில் அருள் போட்டி போடுறாரு. இவரு கூட்டணி கட்சி நிர்வாகிகள, குறிப்பாக தாமரைகட்சிக்காரங்கள மதிக்கிறதே இல்லை அப்டின்ன்னு கட்சிக்காரங்க புலம்பி வராங்க. இந்த அதிருப்திய, இதுநாள் வரை நிர்வாகிகளிடம் மட்டுமே கூறி வந்த கட்சிக்காரங்க, இப்போ சமூக வலைதளங்களிலும் இதுபத்தி பதிவிட்டு வராங்க. ஏற்காடு அடிவாரம் பகுதியை சேர்ந்த ஒரு பாஜக நிர்வாகி, பாமக வேட்பாளர் அருள், எங்கள எந்த நிகழ்ச்சிக்கும் கூப்பிடுறதே இல்ல. இதேநிலை இன்னும் 2 நாள் நீடிச்சா, தேர்தல்ல நாங்க மாம்பழத்தை புறக்கணிப்போம் அப்டின்னு வாட்ஸ்அப் குரூப்களில் பதிவிட்டிருக்காரு. ஏற்கனவே, இலை கட்சிக்காரங்க மாவட்ட செயலாளர் தொகுதியை பறிச்சுட்டோம்னு, நம்ம கூட ஓட்டு கேட்க வரமாட்டேங்கறாங்க. இப்போ, தாமரை கட்சிக்காரங்களும் மாம்பழத்தை புறக்கணிப்போம் அப்டினு அலப்பறை செய்யுறாங்களேனு பாமகவினர் பேசிக்கிறாங்க. கூட்டணிக்குள்ளயே ஆயிரம் பிரச்னையிருக்கு. இதுல நம்ம அண்ணன் எப்படி ஜெயிக்க போறாருன்னு தெரியலன்னு அவரது அடிபொடிகள் புலம்பிட்டு இருக்காங்களாம்……