பழநி: சின்னசேலம் அருகே மாணவி மரணம் விவகாரம் தொடர்பாக பழநியில் வாட்ஸ்அப் குழு அமைத்து போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார். கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 மாணவி இறந்தது தொடர்பாக வன்முறையை தூண்டும் வகையில் செயல்பட்ட சமூக வலைத்தள செயல்பாட்டாளர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம், பழநி அடிவாரம், சன்னதி வீதியில் டீக்கடை நடத்தி வரும் சபரி மகன் கோகுல் (22), வாட்ஸ்அப்பில் மாணவி பெயரில் குரூப் துவங்கி போராட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்திருந்தார். இதுகுறித்து தகவலறிந்த பழநி டவுன் போலீசார் கோகுலை கைது செய்து பழநி கிளைச்சிறையில் அடைத்தனர். மேலும், குழுவில் இணைந்திருந்தவர்களின் விவரங்களை சேகரித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். …