தாம்பரம்: தாம்பரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் கரிகாலன் தாம்பரம் தொகுதி முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு வழியெங்கிலும் பொதுமக்கள் மலர்தூவி, ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். அதன்படி நேற்ற தாம்பரம் இரும்புலியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்களை நேரில் சென்று சந்தித்து குக்கர் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது, பொதுமக்கள் மத்தியில் அவர் பேசுகையில், ‘தாம்பரம் நகர மன்ற தலைவராக இருந்தபோது பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை தாம்பரம் பகுதிக்கு செய்துள்ளேன். குறிப்பாக தாம்பரம் பகுதியில் உள்ள பல பூங்காக்கள் நவீன முறையில் புதுப்பிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். பாதாள சாக்கடை திட்ட பணிகள் துவங்கப்பட்டு பெருமளவு முடிக்கப்பட்டது.மேலும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை தாம்பரம் தொகுதி முழுவதும் மேற்கொள்ள குக்கர் சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்ய வேண்டும்,’ என்றார். பிரசாரத்தின்போது, அமமுக செய்தி தொடர்பாளர் தாம்பரம் நாராயணன், நகர செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய செயலாளர் நந்தகுமார், வட்ட செயலாளர் சதீஷ், சந்திரசேகர், தேமுதிக தாம்பரம் நகர செயலாளர் செழியன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் பிரபாகர், வட்ட செயலாளர் இளங்கோவன் உட்பட அமுமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை சேர்ந்த ஏராளமானோர் உடனிருந்தனர்….