சேலம், டிச.20: சேலம் ரெட்டியூரில் பெரியாண்டிச்சி அம்மன் கோயில் உள்ளது. இங்குள்ள பழமை வாய்ந்த 20 மரங்களை அந்த பகுதியை சேர்ந்த ஜெயராமன், அவரது மனைவி பூங்கோதை ஆகியோர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெட்டியதாக கூறப்படுகிறது. இதனை தட்டான்கரட்டை சேர்ந்த தனதேவன் (86) தட்டிக்கேட்டதால் அவருக்கும் ஜெயராமன் தரப்பினருக்கும் முன்விரோத தகராறு உள்ளது. இதனிடையே மீண்டும் 8 மரங்களை ஜெயராமன் தரப்பினர் வெட்டினர். இதுபற்றி தனதேவன் அழகாபுரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் ஜெயராமன், பூங்கோதை உள்பட சிலர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மரம் வெட்டிய தம்பதி மீது வழக்கு
previous post