மன்னார்குடி, நவ. 10: மன்னார்குடி அருகே சாலை விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழந்தார். மன்னார்குடி அடுத்த நெடுவாக்கோட்டை கீழத் தெருவை சேர்ந்த பால்சேகர் என்பவரது மகன் ரிஷால் (19). இவர் கும்பகோணத்தில் உள்ள தனியார் கல்லூரியில் இளங்கலை முதலாமாண்டு பயின்று வந்தார். தினமும் வீட்டில் இருந்து பைக்கில் கல்லூரிக்கு சென்று வருவது வழக்கம். இந்நிலையில் ரிஷால் நேற்று காலை வீட்டில் இருந்து வழக்கம்போல் கல்லூரிக்கு பைக்கில் சென்றார்.
மன்னார்குடி அடுத்த ரொக்ககுத்தகை சட்ரஸ் அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக, பைக் நிலை தடுமாறி சாலையோரத்தில் இருந்த புளியமரத்தில் மோதியது. இதில், அவர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மாணவர் ரிஷால் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.