திருவில்லிபுத்தூர், ஏப்.6: திருவில்லிபுத்தூர் மகாத்மா வித்யாலயா பள்ளியில் மழலையர் வகுப்பு முடிந்து தொடக்க வகுப்புக்கு செல்லும் மாணவ மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா நடந்தது.
நிகழ்ச்சிக்கு பள்ளி முதல்வர் ராணி முருகேசன் தலைமை வகித்தார். மழலையர் பள்ளி ஆசிரியை ஷீலா தேவி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக டாக்டர் மௌசிகா சுபாஷினி பங்கேற்று, மழலையர்களுக்கு பட்டங்களை வழங்கி பேசினார். பட்டம் பெற்ற மாணவ. மாணவிகளை பள்ளி தாளாளர் முருகேசன் வாழ்த்தி பேசினார். விழா ஏற்பாடுகளை மகாத்மா வித்யாலயா பள்ளி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.