சென்னை: அரசு பணிகள் திறம்பட மற்றும் செவ்வனே நடைபெற நிதி மற்றும் மனிதவள மேலாண்மையை ஒருமைப்படுத்தி ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 10.1.2019 அன்று துவக்கி வைத்தார். இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியதின் மூலம், மாநிலம் முழுவதும் உள்ள கருவூலம் மற்றும் சம்பள கணக்கு அலுவலகங்களில் தற்போது 19,000க்கும் மேற்பட்ட பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் நேரடியாக இணையத்தின் வாயிலாக பட்டியலை கருவூலத்தில் சமர்ப்பிக்கின்றனர். மேலும், 9 லட்சம் அரசு பணியாளர்களின் பணி பதிவேடு கணினி மயமாக்கப்பட்டு சம்பள பட்டியல், பதவி உயர்வு, பணி மாறுதல்கள், விடுப்பு போன்ற மற்ற விவரங்கள் உடனுக்குடன் பதிவிடப்பட்டு வருகிறது. ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டத்தின் அடுத்த கட்டமாக, கருவூலத்தில் பெறப்படும் அரசின் வருவாய் இனங்களை மின்வரவாக மின் செலுத்துச்சீட்டு மூலமாக நேரடியாக பெறுவதற்கான நடைமுறையை முதல்வர் எடப்பாடி நேற்று துவக்கி வைத்தார்.இதன்மூலம் பொதுமக்கள், அரசு துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள் போன்றவை அரசிற்கு செலுத்த வேண்டிய வரவினங்களை, மின்வரவுகளாக 24 மணி நேரமும் தங்குதடையின்றி இணையத்தின் மூலம் (www.karuvoolam.tn.gov.in) செலுத்த வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.இதற்காக ஸ்டேட் வங்கி, பரோடா வங்கி, இந்தியன் வங்கி மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகிய 4 வங்கிகள்தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இவற்றில் பாரத ஸ்டேட் வங்கி மற்றும் பரோடா வங்கி ஆகிய இரு வங்கிகள் இத்திட்டத்தில் ஒருங்கிணைப்பு பணிகளை முடித்துள்ள நிலையில் இவ்விரு வங்கிகளின் வாயிலாக முதற்கட்டமாக அரசின் வருவாய்கள் பெறப்பட்டு, அரசின் ரிசர்வ் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். …
பொதுமக்கள், அரசு துறைகள், உள்ளாட்சி அமைப்புகள்: அரசுக்கு செலுத்தும் தொகையை இ-செலான் மூலம் வழங்கலாம்: முதல்வர் எடப்பாடி துவக்கி வைத்தார்
previous post