காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கை:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் எதிர்வரும் வடகிழக்கு பருவமழை மற்றும் பேரிடர்
காலங்களில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பொது மக்களுக்கு பேரிடர்
தொடர்பான மீட்பு நடவடிக்கைகள் மற்றும் முதன்மை பணிகளை மேற்கொள்ளும் வகையில்
மாவட்டத்தில் உள்ள அனைத்து அமைப்பு சாரா நிறுவனங்கள் மற்றும்
தன்னார்வலர்கள் தங்களது பங்கினை ஆற்றிட மாவட்ட நிர்வாகத்தால்
கேட்டுக்கொள்ளப்படுகிறது.தங்கள் நிறுவனங்கள், தன்னார்வலர்கள் மூலம்
தங்களது இடங்களில் தங்களால் இயன்ற ஆபத்துகால நடவடிக்கைகளான தேடுதல்
மற்றும் மீட்பு பணிகள், இடர்கால தகவல் தொடர்பு, மீட்கப்பட்ட மக்களை
முகாம்களில் தங்கவைத்தல், குடிநீர், உணவு நிவாரண பொருட்கள் வழங்குதல்,
முதலுதவி, மருத்துவ சிகிச்சை, போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் தங்களை
முழுமையாக ஈடுப்படுத்திக்கொள்ள ஆர்வம் உள்ள அமைப்பு சாரா நிறுவனங்கள்
மற்றும் தன்னார்வலர்கள் உரிய படிவத்தில் தங்களது விவரங்களை காஞ்சிபுரம்
மாவட்ட வலைத்தளத்தில் https://kancheepuram.nic.in பூர்த்தி செய்யுமாறு
கேட்டுக்கொள்ளப்படுகிறது. தங்களது சிறப்பான ஒத்துழைப்பை அளிக்குமாறு
அறிக்கையில் கூறப்பட்டுள்ளது….
பேரிடர் காலங்களில் அரசுடன் இணைந்து செயல்பட தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்களுக்கு அழைப்பு
previous post