தர்மபுரி, மே 14: தர்மபுரி கோட்டை வரமகாலட்சுமி உடனுறை பரவாசுதேவ பெருமாள் கோயிலில், வசந்த உற்சவ விழா கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி, சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை, வழிபாடுகள் நடைபெற்றது. தொடர்ந்து வெட்டிவேர் பந்தல் அமைத்து, சுகந்த பரிமள திவ்ய வஸ்துக்களுடன், வசந்த உற்சவ சேவை செய்யப்பட்டது. மேலும், உபகார பூஜைகள் மற்றும் மகா தீபாரதனை நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.
பெருமாள் கோயிலில் வசந்த உற்சவ விழா
previous post