பூந்தமல்லி: பூந்தமல்லியை அடுத்து உள்ள சென்னீர்குப்பம் பகுதியில் சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. இக்கோயில், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. மிகப்பழமையான இந்த கோயிலுக்கு சொந்தமான ரூ. 3 கோடி மதிப்புள்ள சுமார் 2 கிரவுண்ட் காலி நிலம் ஒன்று பூந்தமல்லி பைபாஸ் சாலையை ஒட்டியுள்ள பகுதியில் உள்ளது. இந்த நிலத்தை தனியார் சிலர் ஆக்கிரமித்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கோயில் செயல் அலுவலர் சரவணன், அறநிலையத்துறை தாசில்தார் பிரீத்தி ஆகியோர் தலைமையில் கோயில் பணியாளர்கள், அறநிலைய துறை ஊழியர்கள் நிலத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, அந்த நிலத்தை பயன்படுத்தி வந்த தனி நபர்கள் சிலர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு 100க்கும் மேற்பட்ட போலீசார் பூந்தமல்லி இன்ஸ்பெக்டர் சிதம்பர முருகேசன் தலைமையில் குவிக்கப்பட்டனர். அதிகாரிகளின் விளக்கத்தை அடுத்து அங்கிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. பின்னர், கோயிலுக்கு சொந்தமான நிலம் என்ற அறிவிப்புடன் கூடிய அறிவிப்பு பலகை அங்கே நிறுவப்பட்டது….