திருக்காட்டுப்பள்ளி, ஜூலை 30: பூதலூர் அருகே குடும்ப தகராறில் அண்ணியை அரிவாளால் வெட்டிய கொழுந்தனை போலீசார் கைது செய்தனர். பூதலூர் அருகே குணமங்கலம் மேட்டு தெருவை சேர்ந்த வேலவேந்திரன் மனைவி விஜயலட்சுமி (39). இவர் நேற்று அதிகாலை 3 மணி அளவில் வீட்டின் வெளியில் சத்தம் கேட்கவே எழுந்து வந்து பார்த்தார். அப்போது அவரது கொழுந்தன் பாலமுருகன், அவரது மனைவி சந்தியா இருவருக்கும் இடையே தகராறு நடந்தது. இதில் பாலமுருகன், அவரது மனைவியை அரிவாளால் வெட்ட முயன்றுள்ளார். அதை தடுக்க முயன்ற விஜயலட்சுமிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. தலையில் பலத்த காயம் அடைந்த விஜயலட்சுமியை பூதலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து விஜயலட்சுமி, பூதலூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெகஜீவன் வழக்குப்பதிவு செய்து பாலமுருகனை கைது செய்தார்.