சேலம், அக்.20: ஆயுத பூஜையை முன்னிட்டு பூக்களின் விலை அதிகரித்து வருவதாக பூ வியாபாரிகள் தெரிவித்தனர். சேலம் மாவட்டம் முழுவதும் பரவலாக குண்டுமல்லி, முல்லைபூ, ஜாதிமல்லி, கனகாம்பரம், காக்கட்டான், அரளி, சம்பங்கி, சாமந்தி உள்பட பல ரக பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த பகுதிகளில் அறுவடை செய்யப்படும் பூக்கள் சேலம் வ.உ.சி பூ மார்க்கெட் உள்பட பல பகுதிகளுக்கு விற்பனை செல்கிறது. வரும் 23ம் தேதி ஆயுத பூஜையை முன்னிட்டு பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. சேலம் வ.உ.சி., பூ மார்க்கெட்டில் சாமந்தி, அரளி, குண்டுமல்லி, முல்லை பூ உள்ளிட்ட பூக்களின் விலை அதிகரித்துள்ளது. நேற்று நிலவரப்படி ஒரு கிலோ குண்டுமல்லி ₹700 என விலை கூடியது. முல்லை ₹500, ஜாதிமல்லி ₹280, காக்கட்டான் ₹240, கலர் காக்கட்டான் ₹200, மலை காக்கட்டான் ₹240, சம்பங்கி ₹140, சாதாசம்பங்கி ₹140, அரளி ₹300, வெள்ளை அரளி ₹340, மஞ்சள் அரளி ₹340, செவ்வரளி ₹340, ஐ.செவ்வரளி ₹340, நந்தியாவட்டம் ₹200, சிவப்பு நந்தியாவட்டம் ₹400, சாமந்தி ₹180 என விற்பனை செய்யப்பட்டது. இன்றும், நாளையும் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று பூ வியாபாரிகள் ெதரிவித்தனர்.