சென்னை: காரைக்குடி, தந்தை பெரியார் நகரை சேர்ந்தவர் நாராயணன் (72), ஓய்வு பெற்ற வங்கி ஊழியர். இவர், சென்னை மண்ணடி பகுதியை சேர்ந்த 20 பேரை தென்காசி சாம்பவார் வடகரை கோயிலுக்கு புனித யாத்திரை அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்து இருந்தார். இதற்காக, காரைக்குடியிலிருந்து நேற்று இரவு சிலம்பு விரைவு ரயில் மூலம் சென்னை வந்தார். மேல் பெர்த்தில் படுத்திருந்த இவர் தவறி கீழே விழுந்ததாக தெரிகிறது. நேற்று அதிகாலை, தாம்பரம் அருகே ரயில் வந்தபோது, காதில் ரத்தம் வழிந்தபடி நாராயணன் மயங்கி கிடப்பதை பார்த்த சக பயணிகள், தாம்பரம் ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், மருத்துவருடன் வந்த போலீசார், அவரை பரிசோதித்தபோது, அவர் இறந்தது தெரியவந்தது. இதனையடுத்து, சடலத்தை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்….
புனித யாத்திரை புறப்பட்டவர் ரயிலில் தவறி விழுந்து சாவு
previous post