விராலிமலை, ஜூன்18: அன்னவாசல் அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார் ஓட்டுநரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அன்னவாசல் மற்றும் அதன் சுற்றுப்பகுதி ஆற்று படுகைகள் மற்றும் குளங்களில் இருந்து பொக்லேன் இயந்திரம் மூலம் மணல் அள்ளி கடத்தி அதிக விலைக்கு விற்கப்பட்டு வருவதாக அன்னவாசல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது- இதை தொடர்ந்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது பாசிப்பட்டி ஊராட்சி ஒன்றிய பள்ளி அருகே சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அவ்வழியாக மணல் ஏற்றி வந்த ஒரு டிராக்டரை நிறுத்தி சோதனையிட்டபோது அதில் அனுமதியின்றி மணல் அள்ளி வந்தது தெரியவந்ததை தொடர்ந்து டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார் ஓட்டுநரான அருப்புகோட்டையை சேர்ந்த பால்பாண்டியன்(37) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.