விழுப்புரம்: பெண் எஸ்பி ஒருவருக்கு சிறப்பு டிஜிபி பாலியல் தொல்லை அளித்த வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்தவழக்கை விழுப்புரம் கோர்ட்டில் விசாரிக்கக்கூடாது, இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதாகவும் அதுவரை விசாரணைக்கு தடைவிதிக்கவேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட பெண் எஸ்பியிடம் குறுக்கு விசாரணை நடத்தி முடிக்கும் வரை மற்ற சாட்சிகளிடம் விசாரணை நடத்தக்கூடாது என்று சிறப்பு டிஜிபி தரப்பில் தனித்தனியாக 4 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு அரசு தரப்பில் ஆட்சேபனை தெரிவித்த நிலையில், 4 மனுக்களையும் தள்ளுபடி செய்து நீதிபதி நேற்று உத்தரவிட்டார். …