Thursday, September 19, 2024
Home » படிப்பிடை சிறப்பு பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: கலெக்டர் தகவல்

படிப்பிடை சிறப்பு பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: கலெக்டர் தகவல்

by kannappan

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில், படிப்பிடை சிறப்பு பயிற்சி திட்டத்துக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, கலெக்டர் ஆல்பிஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு. திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகத்தின் தனிபெரும் முயற்சியில் மாவட்ட கலெக்டரின் படிப்பிடை பயிற்சி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்ட மேம்பாட்டிற்காக மாவட்ட நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து நிகழ் நேர பிரச்னைகளுக்கு தீர்வுகாண இப்பயிற்சி திட்டமிடப்பட்ட ஒரு முயற்சியாகும். உதவித் தொகையுடன் 5 முழுநேர பயிற்சியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு 3 மாதங்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளனர். இதற்கு  1.1.1990 அன்று அல்லது அதற்குப் பிறகு பிறந்திருக்க வேண்டும். இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அறிவியல், சமூக அறிவியல், பொறியியல் மற்றும் சட்டம் ஆகிய துறைகளில் நிபுணத்துவமிக்கவராய் இருக்கவேண்டும். தமிழிலும், ஆங்கிலத்திலும் சரளமாக எழுதும் திறன் கொண்டவராக இருக்க வேண்டும். அடிப்படை கணினி அறிவு, தகவல் எடுத்துரைக்கும் திறனும் பெற்றிருக்க வேண்டும். எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் பயிற்சியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.உங்கள் விண்ணப்பம் மற்றும் கல்வி சான்றுகளுடன் சிறுகட்டுரை அனுப்ப வேண்டும். கொரோனா தொற்றால் ஏற்பட்ட பொருளாதாரம், சமூகம், பொது சுகாதாரம் சார்ந்த பிரச்னைகள் மற்றும் சவால்களுக்கான உங்களுடைய தீர்வு கட்டுரையில் இடம் பெறவேண்டும். பணியிடம் திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்க வேண்டும். விண்ணப்பிப்பம் அனுப்புவதற்கு வரும் 31ம் தேதி கடைசி நாள் ஆகும். விண்ணப்பதாரர்கள்  இணையதள முகவரி tiruvallur.nic.in  மின்னஞ்சல் முகவரி tvlrinternship@gmail.com அல்லது தபால் மூலம் மாவட்ட ஆட்சியர், கலெக்டர் அலுவலகம், திருவள்ளூர் என்ற விலாசத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 7402606106, 044- 27663808 என்ற எண்களில் தகவல் பெறலாம் என கூறப்பட்டுள்ளது….

You may also like

Leave a Comment

7 + 18 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi