பெங்களூரு: நைஸ் நிறுவனம் தொடர்ந்த மானநஷ்ட வழக்கில் முன்னாள் பிரதமர் தேவ கவுடாவுக்கு ரூ.2 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு-மைசூரு சாலை அமைக்கும் பணியை மேற்கொண்ட நைஸ் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் உத்தரவிட்டுள்ளது. மைசூரு சாலை அமைக்க சட்டவிரோதமாக பலரது நிலம் கையகப்படுத்தப்பட்டதாக தேவ கவுடா குற்றம்சாட்டியிருந்தார். நிலம் எடுப்பில் 100 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாகவும் கூறியிருந்தார். தேவ கவுடா கூறிய குற்றச்சாட்டை மறுத்த நைஸ் நிறுவனம் ரூ.10 கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு தொடர்ந்திருந்தது. வழக்கை விசாரித்த பெங்களூரு குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மல்லண்ண கவுடா தேவ கவுடாவுக்கு அபராதம் விதித்து தீர்ப்பளித்தது. …