*மாநகர போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன் அதிரடிநெல்லை : நெல்லை மாநகர பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பைக்குகளில் ‘ஏர் ஹாரன்’ ஒலிக்க விட்டு சென்ற நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.நெல்லை மாநகர பகுதியில் பைக்குகளில் செல்வோர், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ‘ஏர் ஹாரன்களை’ அலறவிட்டு பயணித்து வருவதால் பொதுமக்கள், மாணவ, மாணவிகள் பெரிதும் பாதிக்கின்றனர். மேலும் நம்பர் பிளேட் இல்லாமல் பயணிக்கும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அவினாஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். இதன்படி மாநகர போலீஸ் துணை கமிஷனர் (கிழக்கு) சீனிவாசன், சரவணகுமார் (மேற்கு) ஆகியோர் மோட்டார் வாகன சட்டத்திற்கு புறம்பாக, பதிவெண் இல்லாமல், முறையற்ற பதிவெண்களை வைத்தும் பொதுமக்களை அச்சுறுத்தும் ஏர் ஹாரன்களை ஒலிப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.இந்நிலையில் நேற்று காலை வண்ணார்பேட்டை ரவுண்டானாவில் மாநகர போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன் (கிழக்கு) தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது பைக்குகளில் பொருத்தியிருந்த வித்தியாசமான ஒலி எழுப்பான்களை போலீசார் அகற்றினர். இதைத்தொடர்ந்து பதிவெண் எழுதாத பைக்குகளையும் பறிமுதல் செய்து, அவர்களுக்கு அபராதம் விதித்தனர். இதுகுறித்து போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன் கூறுகையில், ‘‘ மாநகர பகுதியில் நடைபெறும் குற்ற சம்பவங்களை தடுக்க இரு சக்கர வாகன தணிக்கை நடைபெறுகிறது. கடந்த 5 நாட்களாக நடத்தப்பட்ட சோதனையில் 250 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில், ‘ஏர்ஹாரன்கள்’ பொருத்தியிருக்கும் பைக்குகளுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பைக்கில் 3 பேர் பயணித்தால் ரூ.4,500 அபராதமும், பதிவெண் இல்லாமல் பைக் ஓட்டினால் முதல் கட்டமாக ரூ.1000 அபராதம் விதிக்கப்படும். 2ம் கட்டமாக ரூ.1,500ம், பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து தகுந்த ஆவணங்கள், பைக்குகள் பதிவு செய்யப்பட்ட எண், அபராத தொகை கட்டிய பிறகு பைக்குகள் விடுவிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.புத்தாண்டு கொண்டாட்ட விதிமீறுவோர் மீது நடவடிக்கைபோலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன் மேலும் கூறுகையில் ‘பாளை வஉசி மைதானத்தில் சிறுவர்கள் மோதிய சம்பவத்தையடுத்து மாநகரில் இரவு ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. விடுமுறை நாட்களில் சுற்றுபவர்களை கண்காணிக்க சிறப்பு படை ஏற்படுத்தப்பட்டுள்ளது. ரோந்து வாகனங்களில் செல்லும் காவலர்களும் கண்காணித்து வருகின்றனர். புத்தாண்டையொட்டி மாநகர் முழுவதும் தேவையான போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படும். மாநகர போலீசாரும், ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். புத்தாண்டு தின இரவில் சட்ட விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்….
நெல்லையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ‘ஏர்ஹாரன்’ ஒலிக்கவிட்டு சென்ற பைக்குகளுக்கு ரூ.10ஆயிரம் அபராதம்
previous post