சென்னை: மக்கள் நீதி மய்யம் சார்பில் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கை: 2017ல் அமலுக்கு வந்த ஜிஎஸ்டி வரியில், நெசவுத்தொழிலுக்கு 5% ஜிஎஸ்டி வரி நிர்ணயிக்கப்பட்டது. இப்போது மீண்டும் `ஜிஎஸ்டி விகிதாச்சாரம் மாற்றம்’ என்ற முறையில், வரும் ஜனவரி முதல் 12% உயர்த்த முடிவு செய்து ஒன்றிய அரசால் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது 140% வரி உயர்வாகும். 2017ல் 5% அறிவிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரியின் காரணமாக நெசவுத்தொழிலை தொடர முடியாமல், சிறு மற்றும் குறு நெசவாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து வேறு பணிகளுக்கு சென்றுவிட்டனர். கொரோனா, மழை வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களால் நெசவுத்தொழில் ஏற்கனவே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு, 2021 நவம்பர் 18ம் தேதி ஒன்றிய அரசு வெளியிட்ட ஜிஎஸ்டி வரி உயர்வு அரசாணையை மறுபரிசீலனை செய்து, வரி உயர்வை திரும்பப் பெற வேண்டும். …