நாகர்கோவில், பிப்.12: நாகர்கோவில் அல்போன்சா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 34வது ஆண்டு விழா நடந்தது. கன்னியாகுமரி மாவட்ட தனியார் பள்ளிகளின் கல்வி அலுவலர் முருகன், தக்கலை மறைமாவட்ட குருகுல முதல்வர் தாமஸ் பவ்வத்துப்பறம்பில் ஆகியோர் கலந்துகொண்டனர். பள்ளி தாளாளர் சனில் ஜாண், முதல்வர் லிசபெத், துணை தாளாளர் ஜார்ஜ் கண்டத்தில், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சேவியர் சந்திரபோஸ், கல்வி ஒருங்கிணைப்பாளர் ராஜையன், பள்ளி துணை முதல்வர் பிரேம் கலா, தலைமையாசிரியர் மோனிக்கா ஸ்பினோலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தக்கலை மறைமாவட்ட குருகுல முதல்வர் தாமஸ் பவ்வத்து பறம்பில், மழலையர் பள்ளி முதல் 12ம் வகுப்பு மற்றும், நீட் பயிற்சி பெறும் மாணவர்கள் வரையுள்ளவர்களுக்கு ஏற்றவாறு செய்யப்பட்டு வரும் சிறப்புக்கட்டமைப்பு வசதிகள், பள்ளி நிர்வாகம் மாணவர்களின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்காக எடுத்துவரும் முயற்சிகளை பாராட்டினார். தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் பள்ளி மாணவர்கள், முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.