விருதுநகர், ஜூன் 29: தூய்மை பணியாளர் வாறுகாலில் விழுந்து உயிரிழந்தார். விருதுநகர் அருகே மாத்துநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ஜெயக்குமார்(55). கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பாண்டியன் கிராம வங்கியில் துப்புரவு பணியாளராக வேலை செய்து வந்தார். மதுவிற்கு அடிமையாகியதால் தினசரி குடித்து விட்டு வீட்டிற்கு வருவதில்லை.
நேற்று முன்தினம் வழக்கம் போல் வங்கிக்கு வேலைக்கு சென்றவர் உடல்நிலை சரியில்லை என கூறி மதியம் வந்துள்ளார். மாலை வெளியே சென்ற நிலையில், நேற்று காலை விருதுநகர் புதுபஸ் நிலையம் எதிரில் உள்ள வாறுகாலில் விழுந்து தலையில் அடிப்பட்டு இறந்து கிடந்துள்ளார். அங்கிருந்தவர்கள் வெளியே தூக்கி, விருதுநகர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு சேர்த்தனர். பஜார் போலீசில் மனைவி காட்டுராணி அளித்து புகாரில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.