தூத்துக்குடி, ஜூலை 7: தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் மத்திய தேர்வு பணிகள் குறித்து நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் ஐஸ்வர்யா பங்கேற்றார். தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் இளம் வயதிலேயே குடிமைப் பணியில் வெற்றிபெற்ற தூத்துக்குடி மாவட்ட கூடுதல் கலெக்டர் ஐஸ்வர்யா பங்கேற்ற மத்திய தேர்வு பணிகள் குறித்த கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. முன்னாள் மாணவர் சங்கம் சார்பாக நடந்த இக்கூட்டத்தில் பங்கேற்ற அவர் நேர்காணலை எதிர்கொள்வது பற்றி தனது அனுபவங்களை மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டார். அத்துடன் மாணவர்களின் சந்தேகங்களுக்கு தெளிவான விளக்கங்கள் கூறி ஊக்கப்படுத்தினார். கூட்டத்திற்கு கல்லூரி முதல்வர் பூங்கொடி முன்னிலை வகித்தார். முன்னதாக சங்கத்தலைவர் ராஜேஷ் தில்லை வரவேற்றார். இதற்கான ஏற்பாடுகளை முன்னாள் மாணவர் சங்கத்தினர் செய்திருந்தனர்.