தூத்துக்குடி: தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின்உற்பத்தி திறன் கொண்ட 5 அலகுகள் இயங்கி வருகின்றன. தேவையான நிலக்கரி கிடைக்காததால் மின் உற்பத்தி அடிக்கடி பாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கையிருப்பில் உள்ள 65 ஆயிரம் டன் நிலக்கரி மூலம் தேவைப்படும் போது மட்டும் அனைத்து அலகுகளும் இயக்கப்படுவதாகவும், மற்ற நேரங்களில் அலகுகள் நிறுத்தி வைக்கப்படுவதாகவும் தெரிய வந்துள்ளது. நேற்று காலை 3 மின்உற்பத்தி அலகுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. தற்போது 2வது அலகு தவிர மற்ற 4 மின்உற்பத்தி அலகுகளும் இயக்கப்பட்டன. இதன் மூலம் சுமார் 830 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது….