Monday, September 23, 2024
Home » திருமயம் குறுவட்ட அளவிலான தடகள போட்டி அன்னை பதின்ம மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சாதனை

திருமயம் குறுவட்ட அளவிலான தடகள போட்டி அன்னை பதின்ம மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சாதனை

by Francis

 

திருயம்,செப்.10: திருமயம் குறுவட்ட அளவிலான தடகளப் போட்டியில் அன்னை பதின்ம மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சாதனைபடைத்துள்ளனர். கடந்த மாதம் ஆகஸ்ட் 28, 29, 30 தேதிகளின் சண்முகநாதன் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற திருமயம் குறுவட்ட அளவிலான தடை தடகளப் போட்டியில அன்னை பதின்ம மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 10 தங்கம், 11 வெள்ளி, 4 வெண்கலம் என 25 பதக்கங்களை பெற்று சாதனை புரிந்துள்ளனர். கிஷோர் கண்ணன் தனிநபர் சாம்பியன் பட்டத்தையும் தட்டி சென்றார்.

கிஷோர் கண்ணன், ராம்ப்ரசாத், ராகவி, பிரியா, புவனேஸ்வரன், பிரகாஷ், பாலமுருகன், முகமது மைதீன், தாமோதரன், கதிரேசன், ராகவி ஆகியோர் புதுக்கோட்டை மாவட்ட அளவிலான தடகளப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். கடந்த 6, 7 தேதிகளில் மன்னர் கல்லூரியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான இளையோர் தடகளப் போட்டியில் வெற்றி பெற்ற ராம் பிரசாத், கிஷோர் கண்ணன், ராகவி, பிரியா மாநில அளவிலான தடகளப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். வீரர்களுக்கு மிக சிறப்பாக பயிற்சி அளித்து ஊக்குவித்த உடற்கல்வி ஆசிரியர் தர்மராஜ், ஓட்டப்பந்தய வீரர்களை பள்ளியின் தாளாளர் ஜெயசீலன், முதல்வர் ஜோசப் ரவிக்கு, நிர்வாக அலுவலர் சுகுமாரி கஸ்தூரிநாதன் பாராட்டினார்.

You may also like

Leave a Comment

four − two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi