திருப்போரூர்: திருப்போரூர் அடுத்த மருதேரியில் இருந்து சிங்கபெருமாள் கோயில் வரை செங்கல்பட்டு பணிமனையில் இருந்து (தடம் எண் 60 எம்) நகர பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. நேற்றுமுன்தினம் இரவு மருதேரி கிராமத்தில் இருந்து பேருந்தை இயக்குவதற்காக கொண்டமங்கலம் கிராமத்தை சேர்ந்த டிரைவர் செந்தில்குமார் (38), செங்கல்பட்டு பெரிய நத்தத்தை சேர்ந்த நடத்துனர் கோபாலகிருஷ்ணன் (57) ஆகியோர் தயாராக இருந்தனர். அப்போது, அங்கு பைக்கில் வந்த 3 பேர், நடத்துனர் கோபாலகிருஷ்ணனிடம் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளனர். திடீரென 3 பேரும் கோபாலகிருஷ்ணனை சரமாரி தாக்கிவிட்டு அவரிடமிருந்த பணப்பையை பறித்தனர். தடுக்க வந்த செந்தில்குமாரை அரிவாளால் சரமாரி வெட்டிவிட்டு 2 செல்போனை பறித்துகொண்டு தப்பினர். இதில், அவரது கை, தலை போன்ற பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. படுகாயத்துடன் இருந்த செந்தில்குமாரை அக்கம்பக்கத்தினர் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். கும்பல் பறித்து சென்ற பையில் ரூ8,500ம், ரூ25 ஆயிரம் மதிப்புள்ள பயணச்சீட்டுகளும் இருந்துள்ளது. இதுகுறித்து திருப்போரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் திருப்போரூர் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது….
திருப்போரூர் அருகே பரபரப்பு: பஸ் டிரைவர், கண்டக்டரை அரிவாளால் வெட்டி பணம் பறிப்பு: மர்ம கும்பலுக்கு போலீஸ் வலை
previous post