Sunday, September 29, 2024
Home » திருப்பதி கோயிலுக்கு சென்றபோது தடுப்பு சுவரில் கார் மோதி தாய், மகன் பரிதாப பலி

திருப்பதி கோயிலுக்கு சென்றபோது தடுப்பு சுவரில் கார் மோதி தாய், மகன் பரிதாப பலி

by kannappan

திருமலை: திருப்பதி அருகே சாலையின் தடுப்பு சுவரில் கார் மோதியதில் ஈரோட்டைச் சேர்ந்த பெண்ணும் அவரது மகனும் பரிதாபமாக இறந்தனர். ஈரோட்டை சேர்ந்த சரண்யா (30) என்பவர் தனது கணவர் மற்றும் மகன் மிதுன் (12) ஆகியோருடன் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க நேற்றிரவு காரில் சென்றனர். ஆந்திர மாநிலம் பூதலப்பட்டு நாயுடுபேட்டை ேதசிய நெடுஞ்சாலையில் திருப்பதி கிராமிய மண்டலம் மல்லவரம் அருகே சென்றபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடியது. அங்குள்ள சாலையின் தடுப்பு சுவரில் மோதி நொறுங்கியது.இதில் காரில் வந்த சரண்யாவும், அவரது மகன் மிதுனும் பலத்த காயமடைந்து அந்த இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். சரண்யாவின் கணவர் லேசான காயத்துடன் தப்பினார். அவர் தனது மனைவியும் மகனும் சடலமாக கிடப்பதை பார்த்து கதறி அழுதார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 2 சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்….

You may also like

Leave a Comment

one + fourteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi