தர்மபுரி, ஆக.14: சுதந்திர தினத்தை முன்னிட்டு தர்மபுரி ரயில்நிலையத்தில் போலீசார் அதிரடியாக நேற்று முதல் சோதனை நடத்தி வருகின்றனர். சுதந்திர தினத்தை முன்னிட்டு, தர்மபுரி ரயில் நிலையத்தில், ரயில்வே போலீசார் நேற்று முதல் சோதனையில் ஈடுபட்டனர். ரயில் நிலைய நுழைவாயில், நடைமேடை பயணிகள் காத்திருக்கும் அறை மற்றும் தண்டவாள பாதையில் வந்து செல்லும் பயணிகளையும், அவர்களது உடைமைகளையும் சோதனை செய்தனர்.
தர்மAபுரி ரயில்வே போலீஸ் எஸ்ஐகள் கோதண்டபாணி, ராமசாமி ஆகியோர் தலைமையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். ரயில்வே தண்டவாளத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். தர்மபுரியில் நின்று செல்லும் ரயில்களிலும் போலீசார் வெடிபொருட்களை கண்டுபிடிக்கும், மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்தனர். இந்த சோதனை நாளை முதல் நடக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.