*2 ஆண்டுகளுக்கு பிறகு சித்திரை 1ல் பல்லாயிரக்கணக்கானோர் தரிசனம்திருச்செந்தூர் : தமிழ் புத்தாண்டு தினத்தையொட்டி திருச்செந்தூர் கோயிலில் சண்முகருக்கு அன்னாபிஷேகம் நடந்தது. கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதையடுத்து 2 ஆண்டுகளுக்கு பிறகு சித்திரை 1ல் பல்லாயிரகணக்கானோர் நேற்று தரிசனம் செய்தனர். சுபகிருது தமிழ் புத்தாண்டையொட்டி அறுபடை வீடுகளில் 2வது படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூபம் தீபாராதனை, 5 மணிக்கு அபிஷேகம் நடந்தது. பக்தர்கள் ஏராளமானோர் கடலில் நீராடி நீண்டவரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். 10 மணிக்கு உச்சிகால அபிஷேகத்தை தொடர்ந்து சண்முகருக்கு அன்னாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மற்ற காலபூஜை நடைபெற்றது. மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜை நடந்தது. சித்திரை விசுவையொட்டி கோயில் உள்பிரகாரத்தில் கண்ணாடி முன்பு பழங்கள், காய்கறிகள், தானியங்கள் வைக்கப்பட்டு கனி காணும் நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர்கள் செய்திருந்தனர்.கடந்த 2020ல் மார்ச் மாத கடைசியில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் அவ்வாண்டு சித்திரை 1ல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. கடந்தாண்டு கட்டுப்பாடுகள் காரணமாக பக்தர்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது. முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி போன்ற கட்டுப்பாடுகளால் கடற்கரை பகுதியும் வெறிச்சோடியது. இந்தாண்டு கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்டுள்ள நிலையில், அதிகாலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் புனிதநீராடி சுவாமியை தரிசித்தனர். இரவு வரை தரிசனத்திற்கு நீண்டவரிசை காணப்பட்டது….