Sunday, October 6, 2024
Home » தமிழகம் முழுவதும் உணவுத்துறையில் கடந்த ஆட்சி குறைபாடு நீக்கியதால் அரசுக்கு மாதம் ரூ.50 கோடி மிச்சம்: அமைச்சர் அர.சக்கரபாணி பேச்சு

தமிழகம் முழுவதும் உணவுத்துறையில் கடந்த ஆட்சி குறைபாடு நீக்கியதால் அரசுக்கு மாதம் ரூ.50 கோடி மிச்சம்: அமைச்சர் அர.சக்கரபாணி பேச்சு

by kannappan

ஒட்டன்சத்திரம்: தமிழகத்தில் உணவுத்துறையில் கடந்த ஆட்சியில் இருந்த பல்வேறு குறைபாடுகளை நீக்கியதால் மாதம் ரூ.50 கோடி மிச்சப்படுத்தப்பட்டு வருகிறது என்று அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்தார். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் திமுக அரசின் நிதி நிலை அறிக்கையை விளக்கியும், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.  விழாவிற்கு தலைமை வகித்து உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி பேசுகையில், ‘‘திமுக அரசு கட்சி பாரபட்சம் இன்றி 234 தொகுதிகளிலும் வளர்ச்சித் திட்டப்பணிகளை செயல்படுத்தி வருகிறது. கடந்த அதிமுக ஆட்சியைப் போல் இல்லாமல் 110 விதியின்படி சொல்லாத திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறோம். தமிழகத்தில் காலியாக உள்ள 64 ஆயிரம் சத்துணவு பணியிடங்கள் நிரப்பப்படும். தமிழகத்தில் இதுவரை 11 லட்சம் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. விண்ணப்பித்த அனைவருக்கும் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. உணவுத்துறையில் கடந்த ஆட்சியில் இருந்த பல்வேறு குறைபாடுகளை நீக்கி, மாதம் ரூ.50 கோடி மிச்சப்படுத்தப்பட்டு வருகிறது’’ என்றார்….

You may also like

Leave a Comment

one + 6 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi