சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,537 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை, தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 2,537 -ஆக உள்ளதுகொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 18,819-ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 804-ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு இல்லை. இதுவரை மொத்தம் 38,028 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 2,560 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது….