சென்னை:தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நேற்று கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில், 1,587 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மொத்தம் 26,27,365 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 1,594 பேர் குணமடைந்தனர். இதுவரையில் மொத்தம் 25,76,112 பேர் குணமடைந்துள்ளனர். மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 18 பேர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதேபோல், அதிகபட்சமாக கோவையில் 232 பேருக்கு தொற்று ஏற்பட்டது. செங்கல்பட்டு 115 மற்றும் ஈரோடு 117 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், செங்கல்பட்டு, சென்னை, மயிலாடுதுரை, சேலம் மாவட்டங்களில் தலா 3 பேர் உயிரிழந்தனர். …