சேலம், ஜூலை 24: சேலம் அம்மாபேட்டை ராமசுந்தரம் தெருவை சேர்ந்தவர் ராஜா(65). இவரது மகன் சற்குணம்(30). நேற்றுமுன்தினம் இவர் வீட்டின் வாசலில் நின்றுகொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த தேவா, சுதிர், பிரசாந்த்(எ) அய்யனார் ஆகியோர் டூவீலரில் மோதுவது போல வேகமாக வந்ததாக கூறப்படுகிறது. இதனை சற்குணம் தட்டிக்கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு, கை கலப்பில் முடிந்தது. இதில் காயம் அடைந்த சற்குணம் வீட்டிற்குள் சென்றார். அவரை பின்தொடர்ந்து வீட்டிற்குள் சென்ற தேவா தரப்பினர் டிவியை அடித்தனர். இதனை தடுக்க வந்த தந்தை ராஜாவும் தாக்கப்பட்டார். இதில் காயம் அடைந்த தந்தையும் மகனும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில் தேவா உள்பட 3பேர் மீதும் அம்மாபேட்டை எஸ்.ஐ.சத்தியமூர்த்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
தந்தை, மகனை தாக்கிய 3 பேர் மீது வழக்கு
previous post