சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அருகே பட்டணத்தான் வாய்க்கால் தூர் வாரும் பணியை ஓராண்டாக கிடப்பில் போட்டு வைத்துள்ளதாக விவசாயிகளும், பொதுமக்களும் புகார் தெரிவித்துள்ளனர். கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோடு பகுதியில் உள்ள 25 கண்மாய் பாலத்திற்கு மேற்கு பகுதியில் விகேடி சாலையை கடந்தும், எறும்பூர் பகுதியிருந்து வரும் பட்டணத்தான் வடிகால் வாய்க்கால் வடக்கு ராஜன் வாய்க்காலில் கலந்து குமார உடைப்பு வழியாக வெளியேற்றப்படுவது வழக்கம் இந்நிலைலையில் வளையமாதேவி, எறும்பூர் வழியாக வரும் பட்டண்தான் வாய்க்காலை தூர் வார ரூ.18 லட்சம் அளவில் டெண்டர் விடப்பட்டு ஓராண்டிற்கு மேல் ஆவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.இந்த நிதியில் 2 லட்சம் அளவில் மட்டும் செலவு செய்யப்பட்டுள்ளதாகவும், மீதம் உள்ள நிதியில் வாய்க்கால் தூர்வாரப் பயன்படுத்தாமல் கிடப்பில் போட்டு வைத்துள்ளதாக சுற்றுப்புற கிராம விவசாயிகள் தெரிவித்துள்ளனர். தூர்வாராத காரணத்தால் கடந்த வடகிழக்கு பருவ மழையின் போது பட்டணத்தான் வாய்க்கால் உடைப்பு ஏற்பட்டு எறும்பூர் பகுதியில் உள்ள விளைநிலங்களில் தண்ணீர் புகுந்து நெற்ப்பயிர்கள் மூழ்கியது குறிப்பிடத்தக்கது. எனவே மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை செய்து 25 கண்மாய் பாலத்தின் அருகே வடக்குராஜன் வாய்க்கால் மேற்கே உள்ள வாய்க்காலை தூர் வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்….