திருவில்லிபுத்தூர்: கடந்த 2006-2011 திமுக ஆட்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சராக இருந்தபோது தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவி மணிமேகலை ஆகியோர், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, கடந்த 2012 அதிமுக ஆட்சியில், திருவில்லிபுத்தூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சொத்து குவிப்பு வழக்கு தொடரப்பட்டது. வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று கோரி அமைச்சர் தங்கம் தென்னரசு, மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நேற்று முன்தினம் திருவில்லிபுத்தூரில் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி கிறிஸ்டோபர் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கிறிஸ்டோபர், போதிய முகாந்திரம் இல்லை எனக்கூறி அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவியை வழக்கிலிருந்து விடுவித்து உத்தரவிட்டார்….