Sunday, October 6, 2024
Home » சென்னையை அடுத்த ஈஞ்சப்பக்கம் அருகே பெத்தேல் நகர் ஆக்கிரமிப்புகளை அகற்ற உச்சநீதிமன்றம் இடைக்கால தடை

சென்னையை அடுத்த ஈஞ்சப்பக்கம் அருகே பெத்தேல் நகர் ஆக்கிரமிப்புகளை அகற்ற உச்சநீதிமன்றம் இடைக்கால தடை

by kannappan

டெல்லி: சென்னையை அடுத்த ஈஞ்சப்பக்கம் அருகே பெத்தேல் நகர் ஆக்கிரமிப்புகளை அகற்ற உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு, ஐ.எச்.சேகர் என்பவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த வழக்கை பொறுத்தவரையில் சென்னை ஈஞ்சப்பக்கத்தில் உள்ள பெத்தேல் நகரில் மெய்க்கால் புறம்போக்கு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளையே அகற்றுவதற்கு கடந்த 2015-16-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவு நடைமுறை படுத்தவில்லை என்று கூறி ஐ.எச்.சேகர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கடத்த ஏப்ரல் மாதம் அக்கிரமிப்புகளாய் உடனடியாக அகற்ற வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஜவால் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணையின் போது மனுதாரர் சார்பில் ஆஜராகி இருந்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஆக்கிரப்பு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் இடத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏழை குடும்பங்கள் உள்ளன, அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினால் அவர்களுடைய வாழ்வாதாரம் என்பது பாதிக்கப்படும், மிகவும் ஏழ்மையில் இருக்க கூடிய அவர்கள் அங்கேயே  தங்குவதற்கான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என உத்தரவிட கோரிக்கை வைத்தார். வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு இடைக்கால தடை விதித்து தமிழக அரசு மட்டுமின்றி இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த ஐ.எச்.சேகர் என்பவருக்கும் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது. இதுமட்டுமின்றி சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற கூடிய தமிழக அரசு அதிகாரிகள் மீது தொடரப்பட்டுள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளாய் விசாரிப்பதற்கு இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். …

You may also like

Leave a Comment

sixteen + fifteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi