Monday, September 30, 2024
Home » சென்னையில் 8 மாதங்களில் மட்டும் 6,719 ஆக்கிரமிப்புகள் அகற்றம்: மாநகராட்சி அதிரடி

சென்னையில் 8 மாதங்களில் மட்டும் 6,719 ஆக்கிரமிப்புகள் அகற்றம்: மாநகராட்சி அதிரடி

by kannappan

சென்னை: சென்னையில், கடந்த 8 மாதங்களில் மட்டும் 6,719 ஆக்கிரமிப்புகளை அகற்றி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களுக்கு உட்பட்ட மாநகராட்சி இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடந்து வருகிறது. கடந்த 6ம் தேதி முதல் 17ம் தேதி வரை மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வுகளில் 15 மண்டலங்களில் பொது இடங்கள் மற்றும் நடைபாதைகளில் 268 நிரந்தர கட்டுமானங்களுடன் கூடிய ஆக்கிரமிப்புகள் மற்றும் 440 தற்காலிக கூடாரங்கள் என மொத்தம் 708 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன. கடந்த 8 மாதங்களில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பொது இடங்கள் மற்றும் நடைபாதைகளில் ஆக்கிரமிப்பு செய்த 2,730 நிரந்தர ஆக்கிரமிப்புகள் மற்றும் 3,989 தற்காலிக ஆக்கிரமிப்புகள் என மொத்தம் 6,719 ஆக்கிரமிப்புகளை அகற்றி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. எனவே, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை மேற்கொண்டுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். அவ்வாறு அகற்றப்படாத ஆக்கிரமிப்புகள் சென்னை மாநகராட்சியால் அகற்றப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. …

You may also like

Leave a Comment

six + nine =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi