செங்கல்பட்டு, மே 12: விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைப்பெறும் என, கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, அவர் விடுத்துள்ள அறிக்கை: செங்கல்பட்டு மாவட்டத்தில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் பிரதி மாதம் மூன்றாவது வியாழக்கிழமை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தலைமையில் நடைப்பெறுவது வழக்கம். இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும், வரும் 18ம் தேதி இக்கூட்டத்தில் கலந்துக்கொள்ளும் வண்ணம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
எனவே, செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் கூட்டத்தில் முகக்சுவசம் அணிந்து, சமூக இடைவெளி விட்டு கலந்து கொண்டு விவசாயம் தொடர்புடைய கோரிக்கைகளை மட்டும் தெரிவித்து பயன்பெறலாம்.
செங்கல்பட்டில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்: கலெக்டர் தகவல்
previous post